இந்தியா - இலங்கை கூட்டுப் போர் பயிற்சி
பனாஜி: இலங்கை - இந்தியா இடையே கூட்டு போர்ப் பயற்சி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவின் கோவா மாநிலத்திற்கு அருகில், இந்த பயிற்சி நடைபெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்திலும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில் மத்திய அரசு அதை கண்டு கொள்வதாக தெரியவில்லை.
இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'சாகர' என்ற கப்பல் கோவா கடற்பிரதேசத்தை நோக்கி சென்றுள்ளது. இன்று ஆரம்பமாகிய இந்த பயிற்சிகள் வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆண்டு தோறும் இரு நாடுகளுக்கும் இடையில் இவ்வாறான போர்ப் பயிற்சிகள் நடைபெற்று வருவதுடன், கடந்த ஆண்டு திரிகோணமலைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் இந்த பயிற்சிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications