எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா- பாக் முடிவு.. எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர்கள் சுமூக பேச்சு
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான்., எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ, தகவல் தொடர்பு பரிமாற்றத்தை அதிகரிப்பதென, இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை இயக்குனர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் குழுவினர், டெல்லியில், கடந்த இரு நாட்களாக சந்தித்து விவாதித்தனர். போர் நிறுத்த ஒப்பந்த மீறல், எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கூட்ட முடிவில், இரு தரப்பிலும், எல்லை பகுதிகளில் அமைதி நிலவும் நோக்கில், இ-மெயில், தொலைபேசி மூலம், தகவல் தொடர்பை அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
எல்லைப்பகுதி மக்களின் பாதுகாப்பு, நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பேசப்பட்டது. இரு தரப்பும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களை நிறுத்த வேண்டும் என, ஒப்புக்கொள்ளப்பட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை, 2016ல், பாகிஸ்தானில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications