இந்தியா, பாக், வங்கதேசம் இணைந்த அகண்ட பாரதம் உதயமாகும்- பா.ஜ.க.வின் ராம்மாதவ் சர்ச்சை கருத்து
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இணைந்த அகண்ட பாரதம் ஒருநாள் உதயமாகும் என்று பா.ஜ.க. தேசிய பொதுச்செயலர் ராம் மாதவ் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தவர் ராம் மாதவ். பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலராக தற்போது இருக்கிறார்.

சர்வதேச செய்தி நிறுவனமான அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் ராம் மாதவ் கூறியுள்ளதாவது:
வரலாற்று ரீதியாக ஒரே பகுதியாக இருந்தவை இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான். 60 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரிக்கப்பட்டவை இவை. இவை இணைந்திருப்பதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.
எந்த ஒரு நாட்டுடன் யுத்தம் செய்து அதை இணைக்கமாட்டோம். மக்களின் ஒருமித்த கருத்துடனேயே இந்த பகுதிகள் ஒருங்கிணையும்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தேசம் என்பதுதான் நடைமுறையில் இருக்கிறது.
இவ்வாறு ராம் மாதவ் கூறினார்.
பிரதமர் மோடி முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக திடீரென பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு இருநாடுகளிடையே நல்லுறவை புதுப்பித்துள்ள நிலையில் ராம்மாதவின் கருத்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications