எங்களுக்கும், இந்தியாவுக்குமான உறவு மாமியார், மருமகள் உறவு போன்றது: பாக். தூதரக அதிகாரி
கொல்கத்தா: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மாமியார்-மருமகள் உறவு போன்றது என்று பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி அப்துல் பாசித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பல சிக்கல்கள் உள்ளது. நல்லெண்ணம் இருந்தும் இந்த உறவை வளரவிட நாம் அனுமதிப்பது இல்லை. நாம் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் எல்லையில் ஏதாவது சிறு நிகழ்வு நடந்தாலும் மாமியார், மருமகள் போன்று நாம் பேசுவதை நிறுத்திக் கொள்கிறோம்.
அடுத்த சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். சார்க் விவகாரங்களை விட மோடி பாகிஸ்தான் வருவது பெரிய விஷயம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்களின் சந்திப்பு நல்லபடியாக நடந்தது.
பேச்சுவார்த்தை நடத்த இது உகந்த நேரம் இல்லை என்று இந்தியா நினைத்தால் நாங்கள் காத்திருப்போம் என்றார்.
மாமியார், மருமகள் உறவு என்கிறீர்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு பாசித் கூறுகையில்,
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை சிறுமைப்படுத்த நான் அவ்வாறு கூறவில்லை. ஜாலியாக தான் தெரிவித்தேன். தவறு என்றால் மன்னித்துவிடுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications