ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி31
ஸ்ரீஹரிகோட்டா: கடல் சார் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 இ என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. இதன்படி ஏற்கனவே 4 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.
PSLV-C31 launches IRNSS-1E, the fifth satellite of the Indian Regional Navigation Satellite System, from Sriharikota pic.twitter.com/sz5lWYvBbR
— ANI (@ANI_news) January 20, 2016 தற்போது 5-வதாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-இ செயற்கைகோளை பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுமையத்தில் இருந்து அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. அதன்படி இன்று காலை சரியாக 9.35 மணியளவில் செயற்கைகோளை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்விசி 31 ராக்கெட்.
1425 கிலோ எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்- 1இ செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோமீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இது நிலைநிறுத்தப்பட உள்ளது. இதனுடைய ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும். இந்த செயற்கைக்கோள் மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications