வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இது: கனிமொழி
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் மீது ராஜ்யசபாவில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்.பி கனிமொழி, இந்திய தலைவர்கள் பலரும், அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதைக்கு உள்ளாகியுள்ளனர்.
விசா மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக தேவ்யானியை அமெரிக்க காவல்துறை பொது இடத்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளது. இந்திய பெண்ணான தேவ்யானிக்கு செய்துள்ள அவமரியாதையை இந்தியர்களால் ஏற்றுக் கொள்ளவே இயலாது.
இதற்கு, இந்தியா கடும் கண்டனத்தை தெரிவிக்க தவறிவிட்டது, நமது வெளியுறவுக் கொள்கையை மறுபரீசிலனை செய்யும் நேரம் தருண மிது என்றார்












Click it and Unblock the Notifications