விவசாயிகளுக்கு உதவ குளிர்பானங்களில் பழச்சாறை கலக்கலாமே: பெப்சி, கோக்கிற்கு மோடி பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்திய விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் பெப்சி மற்றும் கோககோலா உள்ளிட்ட குளர்பானங்களில் பழச்சாறுகளை கலக்க அந்நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தும்கூரில் 110 ஏக்கர் பரப்பில் ரூ. 1,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய உணவுப் பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அப்போது மோடி கூறுகையில்,

கோக்

கோக்

கோடிக்கணக்கான மக்கள் பெப்சி மற்றும் கோக் வாங்குகிறார்கள். இந்த குளிர்பானங்களில் 5 சதவீதம் பழச்சாற்றை கலக்க முடியுமா என்று பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களை கேட்டுள்ளேன்.

விவசாயிகள்

விவசாயிகள்

அவர்களால் மட்டும் குளிர்பானங்களில் பழச்சாற்றை கலக்க முடிந்தால் நம் நாட்டு விவசாயிகளுக்கு நிறைய பணம் கிடைக்கும். நம் விவசாயிகள் பழங்களை தூக்கி எறியத் தேவையில்லை என்றார் மோடி.

பெப்சி

பெப்சி

முன்னதாக இந்தியா வந்த பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயியிடம் பெப்சியில் உள்ள சர்க்கரை அளவை குறைக்குமாறு மோடி கேட்டுக் கொண்டார்.

பழங்கள்

பழங்கள்

உலக அளவில் அதிக பழங்கள், காய்கறிகளை விளைவிக்கும் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. இங்கு போதிய சேமிப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பழங்கள், காய்கறிகளை வீசி எறிகிறார்கள்.

அமெரிக்கா

அமெரிக்கா

மோடி நாளை அமெரிக்கா கிளம்ப உள்ள நிலையில் கோக் மற்றும் பெப்சி நிறுவனத்திற்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அமெரிக்காவில் அவர் பெப்சி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவன தலலைவர்களை சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+