தாவூத் இப்ராகிமின் ரூ 100 கோடி சொத்துகள் முடக்கம்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது அடியாட்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் உள்ள மேலும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்க இந்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை வலைவீசிதேடி வருவதையடுத்து, அவனது செயல்பாடுகளை முடக்கும் வகையில், பல்வேறு அதிரடி நவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது, இங்கிலாந்தில் தாவூதுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியல் இந்திய அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

India to seek seizure of Dawood’s UK properties

மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் தாவூதுக்கு சொந்தமான 50 சொத்துக்களை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் இங்கிலாந்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்புள்ள 10 சொத்துக்கள் மிக முக்கியமானவை. இதனால், தாவூத் சொத்துக்கள் குறித்து இந்திய அதிகாரிகள் இங்கிலாந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இங்கிலாந்தில் தாவூத் கும்பலின் பெயரில் உள்ள சொத்துக்களை முடக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே வளைகுடா நாடுகளில் உள்ள அவனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அரசு முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+