இந்திய வரலாற்றில் முதன் முறையாக ரியோ ஒலிம்பிக்கு 90 வீரர்கள் தகுதி: கிரண் ரிஜிஜு தகவல்
டெல்லி: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவிலிருந்து 90 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வீரர்கள் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளதாக மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவத்துள்ளார்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பல நாடுகளிலிருந்தும் 10,500க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதில் இந்திய விளையாட்டு வீரர்கள் 90 பேர் தகுதி பெற்றுள்ளனர். இது ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா அனுப்பும் மிக அதிகமான விளையாட்டு வீரர்கள் என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சார்பில், அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், 58 வீரர்கள் தனிநபர் போட்டிகளிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியில் 32 வீரர்களும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற வீரர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பயிற்சி அளித்து வருவதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். அப்போது பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் கால்பந்து வீரரருமான பிரசுன் பானர்ஜி, இந்தியாவில் திறமையான வீரர்கள் இருப்பதாகவும் ஆனால் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு விளையாட்டுத் துறையை மேம்படுத்த அனைத்து ஆலோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications