For Quick Alerts
For Daily Alerts
Just In
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கம்
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி சீனா வரைபடம் வெளியிட்டிருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனா வெளியிட்ட வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. சீனாவின் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்றும் அதில் குறிக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சீனாவின் அத்து மீறல் பற்றி விளக்கம் அளித்த இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதீன், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; சீனாவிற்கு சொந்தமானது அல்ல. பல முறை சீனா அதிகாரிகளிடம் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை நிலையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படபோவது இல்லை என்றார்.
Comments
English summary
The India government has strongly criticised the latest move by China to project Arunachal Pradesh as part of it. In a strongly worded comment, the Ministry of External Affairs said that the north-eastern state will remain part of India.
Story first published: Saturday, June 28, 2014, 17:43 [IST]