சூப்பர்சானிக் ஏவுகணை ”பிரமோஸ்” வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: இந்திய ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக வெற்றிகரமாக பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை பரிசோதித்துள்ளது இந்தியா.
உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
ராஜஸ்தானில் உள்ள போக்ரான் பாலைவனப் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் சென்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது.
இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையானது 300 கிலோ எடை கொண்டது. ஒலியை விட 2.8 மடங்கு வேகத்துடன் பாய்ந்து தாக்கும் ஆற்றல் கொண்டது என்பது முக்கியமான ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications