உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது 4 மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு
உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் டெல்லியில் நீதிபதி செல்லமேஸ்வர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
- இந்திய உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?
- நீதிபதி கர்ணன் விவகாரத்தில் என்ன நடக்கிறது?
- நீட் போராட்டங்கள்: சட்டம் ஒழுங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்திய வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள நான்கு நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்
பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வு உள்பட பல சர்ச்சைகளை அவர்கள் தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் கவலையையும் ஆட்சேபத்தையும் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு முன்னதாகவே கொண்டு சென்றும் கவனிக்கப்படவில்லை என்றும், இன்று காலையும் அவரிடம் இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டும் அது கவனிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் புகார் கூறினார்கள்.
தலைமை நீதிபதிக்கு அவர்கள் ஏற்கெனவே எழுதிய ஏழு பக்க கடிதத்தில், தலைமை நீதிபதி அனைத்தையும் நிர்வகித்தாலும், உச்ச அதிகாரம் படைத்தவர் அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர். அதில், நீதிபதி கர்ணன் விவகாரம் குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய வழக்குகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவை தலைமை நீதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளுக்கு ஒதுக்கப்படுவது உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைத்திருப்பதாக தங்கள் கடிதத்தில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்களது முயற்சி தோல்வியடைந்த காரணத்தால்தான், என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களிடம் தெரிவித்து, அடுத்து அவர்கள் முடிவு செய்யட்டும் என்பதற்காகத்தான் தாங்கள் செய்தியாளர்களைச் சந்தித்து இதை அறிவித்ததாகவும் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- காஷ்மீர்: பெல்லட் குண்டுகளால் பார்வை இழந்த மாணவி பள்ளித் தேர்வில் சாதனை
- அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக திட்டிய டிரம்ப்
- 'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட் வாழ்கையின் சுவாரஸ்ய பக்கங்கள்!
- இஸ்ரோ: வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் - 6 முக்கிய தகவல்கள்
- ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications