பறக்குது கை கொடி.. சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சி.. பாஜக ஆட்சி கனவு கலைந்தது- இந்தியா டிவி கணிப்பு
ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புகள் உள்ளதாக இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவின் முழு விவரங்களை பார்க்கலாம்.
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த ஐந்து மாநில தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும் காங்கிரசும் ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்களை கைப்பற்றுவதில் 2 கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.

தெலுங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி சட்டசபை தேர்தல் என்பதால் இந்த மாநிலங்களில் வெற்றியை உறுதி செய்வதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக களமாடி வருகின்றன. நாடுமுழுவதும் கவனம் பெற்றுள்ள 5 மாநிலங்களுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சத்தீஷ்கரை பொறுத்தவரை அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி நீடித்து வரும் நிலையில், காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி சத்தீஷ்கரில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், காங்கிரஸ் கட்சியின் கையே சற்று ஓங்கியுள்ளது. சத்தீஷ்கரில் பாஜகவுக்கு 30-40 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46-56 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது. சத்தீஷ்கரில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 46 ஆகும். எனவே, சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று இந்தியா டிவி சி.என்.எக்ஸ் தெரிவித்துள்ளது.
சத்தீஹ்கரில் மொத்த தொகுதிகள் : 90
பெரும்பான்மைக்கு : 46
காங்கிரஸ்: 46-56 தொகுதிகளில் வெற்றிக்கு வாய்ப்பு
பாஜக: 30-40
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications