ஆர்கே நகர் தேர்தலில் குறைவான பணமே பிடிக்க முடிந்தது... புதிய தேர்தல் ஆணையர் ராவத் பேட்டி!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குறைவான பணத்தை பிடிக்க முடிந்ததாக புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது குறைவான பணத்தை பிடிக்க முடிந்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலம் என்றும் தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது சவாலான விஷயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஜோதியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓ.பி.ராவத் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். ராவத் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நாடு முழுவதும் 38 கோடி வாக்காளர்களின் அடையாள அட்டை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பணியை 100 சதவீதம் முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு முறை தேர்தல் நடத்தும் போதும் பணப்பட்டுவாடா என்பது சவாலான விஷயமாக இருக்கிறது. தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலம், வேட்பாளர்கள் விதவிதமான முறைகளில் பணப்பட்டுவாடா பரிசுப் பொருட்களை விநியோகிக்கின்றனர்.
ஆர்கே நகர் தேர்தலின் போது பணப்பட்டுவாடா முற்றிலும் தடுக்கப்பட்டனவா என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஏனெனில் பறக்கும் படை,துணை ராணுவம் பயன்படுத்தப்பட்டு இந்த முறை குறைந்த அளவிலான பணத்தையே பிடிக்க முடிந்தது. பணப்பட்டுவாடாவை தடுக்க வேறு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ அதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என்றும் ராவத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications