தெலுங்கானா-சட்டீஸ்கர் மாநில எல்லையில் 8 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்ற அதிரடிப்படை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள சுக்மா மாவட்டத்தின் கோட்டிபாடு என்ற காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே எற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 5 பெண்களும் அடங்குவர்.

தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில கூட்டு அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Indian forces kill 8 Maoist rebels in gunbattle on Telangana-Chhattisgarh border

இரு மாநில எல்லையில் உள்ள சுக்மா மாவட்டத்தின் கோட்டிபாடு என்ற காட்டுப்பகுதியில் நேற்று அதிகாலை தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அதிரடிப்படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே எற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், தெலுங்கானாவின் வெங்கடாபுரம் பகுதி மாவோயிஸ்டு செயலாளரான லச்சா என்ற குஞ்சா வீரய்யா உட்பட 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 5 பெண்களும் அடங்குவர்.

சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, ஒரு எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி மற்றும் 3 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிரடிப்படை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+