1993 முதல் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத்!
டெல்லி: நிழல் உலக தாதாவும், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதையும், அந்நாட்டு அரசு 3 பாஸ்போர்ட்டுகள் வழங்கியுள்ளதையும் இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
மும்பையில் 1993 ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பின், தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடியதும், அந்நாட்டு ஐ.எஸ்.ஐ. அமைப்பின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து இண்டர்போல் உதவியுடன், அவனை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாவூத் இப்ராகிம் இருப்பிடம் தொடர்பாக உள்துறை இணைஅமைச்சர்கள் இருவர் அண்மையில் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள முர்ரீ சாலையில் தாவூத் இப்ராகிம் தங்கி இருப்பதை இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அவனுக்கு பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ள 3 பாஸ்போர்ட்டுகள், அவற்றின் எண்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாவூத் குறித்து இவ்வளவு தெளிவான தகவல்களை இந்தியா கொடுத்தும் கூட பாகிஸ்தான் ஒரு கொட்டாவி கூட விடாமல் கமுக்கமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications