3 நாட்களுக்கு தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்... இந்திய வானிலை மையம்!
நவம்பர் 26 முதல் 28 வரை தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி : வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் நவம்பர் 26 முதல் 28 வரை 3 நாட்களுக்கு தென்கடலோர மாவட்டங்களில் கனமைழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் தொடக்கமே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. ஒரே நாளில் அதிகபட்ச மழை பெய்ததால் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பாதிப்பிற்கு ஆளானது. தொடர்ந்து ஒரு வாரம் வெளுத்து வாங்கிய மழை அதன் பிறகு அவ்வபோது தலைகாட்டிவிட்டு செல்கிறது.

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வரும் சூழலில்
வடகிழக்குப் பருவமழை குறித்த அறிவிப்பை முன்எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதில் நவம்பர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications