காஷ்மீரில் சக வீரர் சுட்டதில் 5 ராணுவத்தினர் பலி- துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சக வீரர் சுட்டதில் 5 ராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொன்ற ராணுவ வீரரும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கன்டெர்பல் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் சக ராணுவ வீரர் ஒருவர் கண்மூடித்தனமாக இதர ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 5 பேர் பலியாகினர்.

பின்னர் அந்த ராணுவ வீரரும் தம்மைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications