லடாக்கில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு! கற்கள் வீசி அட்டூழியம்!!
லடாக்கில் சீன ராணுவத்தினரின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. நமது வீரர்கள் மீது கற்களை வீசி சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு: ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை நமது ராணுவ வீரர்கள் மனித சங்கிலி அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா ராணுவத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த பகுதி பூடானுக்கு சொந்தமானது என்றாலும் அது நமது ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளதால் அந்த பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

எல்லையில் பதற்றம்
இதனால் எல்லையில் 2 மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

லடாக்கில் பிரச்சினை
சுதந்திர தினமான நேற்று ஜம்மு- காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள பாங்கொங் ஏரி வழியாக சீனா ஊடுருவ முயன்றது. இதை கண்ட ராணுவத்தினர் அதை முறியடிக்க திட்டமிட்டனர். பாங்கொங் ஏரி என்பது இந்தியாவையும், சீனாவையும் பிரிக்கும் பகுதியாகும்.

மனித சங்கிலி
நமது வீரர்கள் அனைவரும் கைகளை கோர்த்து கொண்டு மனித சங்கிலி போல் அரண் அமைத்து சீனாவின் ஊடுருவலை முறியடித்தனர். இதனால் சீனா ஆத்திரமடைந்தது.

கற்கள் வீச்சு
அப்போது சீன ராணுவத்தினர் கற்களை வீசி ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்தனர். இறுதியில் சீன ராணுவத்தினர் அனைவரும் விரட்டி அடிக்கப்பட்டனர். எனினும் லடாக் எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications