குப்பையில் கிடந்த ‘கோமேதகம்’... வெடிகுண்டு என அஞ்சிய மக்களால் டெல்லியில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பையில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று மீட்கப் பட்டுள்ளது.
டெல்லியின் ஜெயிட்பூர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் சந்தேகத்துக்கிடமாக மர்மப் பை ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த இடத்தை சோதனையிட்ட போது பையினுள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
பையில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த போலீசார், பைக்குள் இருந்த பெண் குழந்தையை பத்திரமாக மீட்டனர். உடனடியாக, சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அக்குழந்தையை போலீசார் கொண்டு சென்றனர்.
பிறந்து சில நாட்களே ஆன அக்குழந்தையை யார் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றனர் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications