லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை வைத்து ஆட்டம் காட்டும் பாக். தீவிரவாதிகள்
டெல்லி: இந்தியாவுக்குள் ஊடுருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்துவதால் அவர்களை சமாளிப்பது இந்திய ராணுவத்திற்கு சவாலாக உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி செக்டரில் பாகிஸ்தானின் ஆதிக்கம் சற்று அதிகமாக உள்ளது. அங்கு உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தானில் இருந்து யாரும் ஊடுருவிவிடாமல் இருக்க இரவும், பகலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் யாரும் ஊடுருவாமல் இருக்க அப்பகுதியில் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

அதிநவீன கருவி
உரி செக்டர் பகுதி வழியாக யாராவது ஊடுருவுகிறார்களா என்பதை கண்காணிக்க இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட இமேஜர் கருவியை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.

பாகிஸ்தான்
உரி செக்டரில் இந்திய நிலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாகிஸ்தான் ராணுவ நிலை. அவர்கள் அங்கிருந்து இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

பனிக்காலம்
முன்பெல்லாம் பனிக்காலத்தில் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவது இருக்காது. ஆனால் தற்போது பனிக்காலத்திலும் ஊடுருவுகிறார்கள்.

தீவிரவாதிகள்
தற்போது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்களை கொண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 பாகிஸ்தானிய தீவரவாதிகள் இந்திய ராணுவத்துடன் 36 மணிநேரம் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் ராணுவ வீரர்களை போன்று திறமையாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

சாட்டிலைட் போன்கள்
அந்த 6 தீவிரவாதிகள் பனியின் தாக்கம் தெரியாமல் இருக்க சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட உடைகள், காலணிகள் அணிந்திருந்தனர். அவர்களிடம் சாட்டிலைட் போன்கள், அதிக சக்தி அளிக்கும் உணவுகள், அதிநவீன ஆயுதங்கள் இருந்தன.

திறமை
கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் உரி செக்டார் வழியாக ஊடுருவி இந்திய ராணுவ வீரர்கள் 8 பேர் மற்றும் போலீசார் 3 பேரை கொன்றனர். அவர்கள் செயல்பாட்டில் ராணுவ பயிற்சி தெரிந்தது.

ஜிபிஎஸ்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முன்பு எல்லாம் ஸ்போர்ட்ஸ் ஜிபிஎஸ் வைத்திருந்தனர். ஆனால் தற்போதோ அதிநவீன ஜிபிஎஸ் கருவிகளுடன் வருகிறார்கள். மேலும் அவர்கள் ஸ்கைப் போன்றவை மூலம் பேசிக் கொள்கிறார்கள்.

இந்திய ராணுவம்
தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே பாகிஸ்தானில் இருந்து ஊடுருபவர்களை சமாளிக்க முடியும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications