வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை.. இன்போசிஸ் நாராயண மூர்த்தி விடாப்பிடி! மீண்டும் அவரே கொடுத்த விளக்கம்
கொல்கத்தா: நம் நாட்டு இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூறியதற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தது. இருந்த போதும் தனது கருத்தில் இருந்து நாராயண மூர்த்தி பின் வாங்காமல், மாறாக தனது கருத்தை நியாயப்படுத்தும் விதமாக அதற்கு விளக்கம் அளித்து அவர் மீண்டும் பேசியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, தொழிலாளர்களின் பணி நேரம் குறித்த பேச்சு விமர்சனத்திற்கு உள்ளானது. நாராயண மூத்தி கூறுகையில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. பிற நாடுகளுடன் போட்டி போட நாம் தயாராக இருக்க வேண்டும்.

நம் நாட்டு இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். நாராயணமூர்த்தியின் இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. 70 மணி நேரம் வேலை செய்தால் குடும்பத்தினருடன் சுத்தமாக நேரத்தைச் செலவிட முடியாது என்றும், இயந்திரத்தனமான வாழ்க்கையாக மாறிவிடும் எனவும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
அதேநேரத்தில் நாராயண மூர்த்தியின் கருத்து முதலாளித்துவ பார்வையில் இருப்பதாகவும் ஊழியர்களை பற்றி அவர் எதுவும் சிந்திக்கவில்லை என்றும் காட்டமாக கூறினர். கடுமையான விமர்சனங்கள் வந்த போதும் தனது கருத்தில் இருந்து நாராயண மூர்த்தி பின் வாங்கவில்லை. மாறாக தனது கருத்தை நியாயப்படுத்தும் விதமாக நாராயணமூர்த்தி பேசி வருகிறார்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா தொடக்க விழாவில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவை நம்பர் 1 ஆக உருவாக்குவதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் உணரவேண்டும். உலகின் முன்னணி நிறுவனங்களுடன் நமது நிறுவனத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று நான் இன்போஸ்சில் சொல்வேன்.
உலகின் தலைசிறந்த நிறுவனங்களுடன் நம்மை ஒப்பிடும் போது, இந்தியர்களாகிய நாம் நிறைய பணியாற்ற வேண்டும். நமது இலக்கை மிக உயர்வாக வைக்க வேண்டும். ஏனெனில், 800 மில்லியன் மக்கள் இலவசமாக ரேஷன் பெறுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் 80 கோடி பேர் வறுமையில் உள்ளார்கள். நாம் கடினமாக உழைக்க தயாராகவில்லை என்றால், பிறகு யார் செய்வார்கள்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே வறுமைக்கு எதிரான ஒரே தீர்வாகும். 70 களில் பாரிஸில் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியா எவ்வளவு ஊழல் நிறைந்தது, அசுத்தமானது என மேற்கு நாடுகள் பேசின. எனது நாட்டில் (இந்தியா) வறுமை நிலவியது. சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தன. மேற்கு நாடுகளில் அனைவரும் கணிசமான அளவு வளர்ச்சி பெற்றார்கள். ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கின.
இது தவறாக இருக்க முடியாது என நினைத்தேன். பிரான்சின் கம்யூனிச தலைவரை நான் சந்தித்தேன். எனது அனைத்து கேள்விக்கும் பதிலளித்தார். ஆனால், எனக்கு திருப்தி ஏற்படவில்லை. வறுமையை ஒழிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமே ஒரே வழி என நான் உணர்ந்தேன். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதால், தொழில் அதிபர்களும் தேசத்தை கட்டமைக்கிறார்கள் என உணர்ந்து கொண்டேன். முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை உருவாக்குவதோடு வரியும் செலுத்துகிறார்கள்" என்றார்.
சிறப்பாக செயல்பட்டால்தான் அங்கீகாரம் கிடைக்கும். அங்கீகாரம்தான் மரியாதை கொடுக்கும். மரியாதை அதிகாரத்தை தரும். நமது முன்னோர்களின் கனவை நிறைவேற்ற இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனால்தான் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். இந்தியர்களை விட சீனா தொழிலாளர்கள் 3.5 மடங்கு ஆக்கப்பூர்வமானவர்கள் என இங்கு ஒருவர் சொன்னார்.
முட்டாள்தனமான கருத்துக்களை எழுதிவிட்டு பரிதாபகரமான நிலையிலும் உலகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருப்பது எளிது. இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் நான் சொல்வது என்னவென்றால், உங்களின் மதிப்புகளை உணர்ந்து கொள்ள வாழ்க்கையை அர்ப்பணித்து செயல்வேடவேண்டும் என்பதே" என்றார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications