உயர் அதிகாரி மீது இன்போசிஸ் பெண் ஊழியர்கள் பாலியல் புகார்
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அந்நிறுவன பெண் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸில் பணிபுரியும் சில பெண் ஊழியர்கள் [email protected] என்ற இமெயில் முகவரியில் இருந்து புகார் அனுப்பியுள்ளதாக மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

அந்த இமெயிலில் கூறியிருப்பதாவது,
நாங்கள் சில பெண்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். உயர் அதிகாரி ஒருவர் எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று புகார் அளித்தும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மீடியாக்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து எங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இன்போசிஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
பாலியல் புகார்கள் குறித்து நாங்கள் எப்பொழுதும் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது போன்ற விஷயங்களில் துரித நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்நிலையில் மூத்த அதிகாரி ஒருவர் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரை ஏற்கவில்லை என்பதில் உண்மை இல்லை என்றார்.
முன்னதாக கடந்த 2002ம் ஆண்டில் டைரக்டர் பனீஷ் மூர்த்தியை பாலியல் புகார் தொடர்பாக இன்போசிஸ் பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications