அர்விந்த் கெஜ்ரிவால் மீது மை வீச்சு.. மாணவர் கைது
ஜெய்ப்பூர்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாணவர் ஒருவர் மை வீசினார். மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவரின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிகானீர் சென்றிருந்தார் கெஜ்ரிவால்.

உள்ளூர் பிரமுகர் ஒருவர் வீட்டிலிருந்து இரவு 10 மணிக்கு வெளியே வந்து கொண்டிருந்தபோது, தினேஷ் ஓஜா என்பவர், 'அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தேச விரோதி" என்று சத்தமிட்டபடி கெஜ்ரிவால் முகத்தில் மை வீசினார்.
இது அந்தப் பகுதியை பரபரப்பாக்கியது. கெஜ்ரிவால் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் மை வீச்சில் ஈடுபட்ட தினேஷ் ஓஜாவை போலீசார் கைது செய்தனர். விசாரனையில் அவர் ஏவிபிவி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹூம்ம்ம்.... என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். அவர்களை நான் வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications