நீர்நிலைகளில் விஷம் கலக்க பாகிஸ்தான் திட்டம்.. ராஜஸ்தான் அரசுக்கு உள்துறை எச்சரிக்கை
டெல்லி: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ராஜஸ்தான் மாநில நீர்நிலைகளில் விஷம் கலக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் பீதியைக் கிளப்பியுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள நீர்நிலைகளில் விஷம் கலந்து மக்களை கொல்ல பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் உளவுத்துறை வட்டாரங்கள் உஷார்படுத்தியுள்ளன.

இதையடுத்து, எல்லையோரம் உள்ள ஜெய்சால்மர் மற்றும் பட்மெர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளும், நீரேற்று நிலையங்களும் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக உள்ளூர் மக்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் விநியோகத்துறை தலைமை அதிகாரி நேமாராம் பரிஹர் இன்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications