பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்க்க ஆர்வமா.? முன்பதிவு துவங்கியது
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 22-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலம் , ரிசாட்-2பி என்கிற செயற்கை கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. விண்ணில் ஏவப்பட உள்ள இந்த ராக்கெட்டை நேரில் பார்க்க விரும்புவோருக்கு இஸ்ரோ வாய்ப்பு அளித்துள்ளது.
22ம் தேதி விண்ணில் பாய உள்ள ராக்கெட் மூலம் ரிசாட் 2-பி என்ற செயற்கைகோள் புவியிலிருந்து சுமார் 555 கி.மீ. தொலைவில் குறிப்பிட்ட விண்வெளி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைகோளில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய, அதிநவீன புகைப்பட சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் ரேடார் தொழில் நுட்ப உதவியுடன் பூமியை மிகத்தெளிவாக படம் பிடித்து நம் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இந்த செயற்கைகோள் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்போது கூட பூமியின் பரப்பை மிக தெளிவாக படம் பிடித்து அனுப்பும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை பல்வேறு வகைகளில் மாணவர்களுக்கு இஸ்ரோ ஊக்குவித்து வருகிறது. மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நடவடிக்கைகளை பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1-ல் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட்டை நேரில் பார்வையிட முதல் முதலாக இஸ்ரோ 1000 பேருக்கு அனுமதி வழங்கியது. இதற்கென பிரத்யேகமாக இஸ்ரோ வளாகத்தில் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் விண்வெளி கண்காட்சியகம், திறந்தவெளி பார்வையாளர் மாடம், ராக்கெட், செயற்கைகோள், புகைப்பட கண்காட்சியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இரண்டாவது முறையாக ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்க்க மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது இஸ்ரோ.
இதற்காக 1000 பேருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதலை நேரில் பார்ப்பதற்கான முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் தேவையான விவரங்களை பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவு தளத்தில் இருந்து வரும் 22-ம் தேதி காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் ஏவப்பட உள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications