பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்க்க ஆர்வமா.? முன்பதிவு துவங்கியது
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 22-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலம் , ரிசாட்-2பி என்கிற செயற்கை கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. விண்ணில் ஏவப்பட உள்ள இந்த ராக்கெட்டை நேரில் பார்க்க விரும்புவோருக்கு இஸ்ரோ வாய்ப்பு அளித்துள்ளது.
22ம் தேதி விண்ணில் பாய உள்ள ராக்கெட் மூலம் ரிசாட் 2-பி என்ற செயற்கைகோள் புவியிலிருந்து சுமார் 555 கி.மீ. தொலைவில் குறிப்பிட்ட விண்வெளி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைகோளில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய, அதிநவீன புகைப்பட சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் ரேடார் தொழில் நுட்ப உதவியுடன் பூமியை மிகத்தெளிவாக படம் பிடித்து நம் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இந்த செயற்கைகோள் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்போது கூட பூமியின் பரப்பை மிக தெளிவாக படம் பிடித்து அனுப்பும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை பல்வேறு வகைகளில் மாணவர்களுக்கு இஸ்ரோ ஊக்குவித்து வருகிறது. மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நடவடிக்கைகளை பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1-ல் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட்டை நேரில் பார்வையிட முதல் முதலாக இஸ்ரோ 1000 பேருக்கு அனுமதி வழங்கியது. இதற்கென பிரத்யேகமாக இஸ்ரோ வளாகத்தில் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் விண்வெளி கண்காட்சியகம், திறந்தவெளி பார்வையாளர் மாடம், ராக்கெட், செயற்கைகோள், புகைப்பட கண்காட்சியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இரண்டாவது முறையாக ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்க்க மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது இஸ்ரோ.
இதற்காக 1000 பேருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதலை நேரில் பார்ப்பதற்கான முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் தேவையான விவரங்களை பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவு தளத்தில் இருந்து வரும் 22-ம் தேதி காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் ஏவப்பட உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications