என் சீட்டைக் குறி வைக்கிறாரா மோடி.. பாஜகவிடம் விளக்கம் கேட்கும் முரளி மனோகர் ஜோஷி
டெல்லி: தான் போட்டியிட முடிவு செய்துள்ள வாரணாசி தொகுதியில், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுவது குறித்து பாஜக தலைமை விளக்கம் தர வேண்டும் என்று மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் பாஜகவுக்குள் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜோஷி மட்டுமல்ல, சுஷ்மா சுவராஜும் வேறு ஒரு பிரச்சினை தொடர்பாக பாஜக தலைமையுடன் மோத ஆரம்பித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பாஜகவுக்குள், உட்கட்சி மோதல் வெடித்துள்ளதால் கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று டெல்லியில் நடந்த பாஜக தலைவர்கள் கூட்டத்தில்தான் இந்த மோதல் வெடித்ததாம்.

என்னோட வாரணாசி மோடிக்கா...
முரளி மனோகர் ஜோஷி தான் போட்டியிட்டு வரும் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியி ஆர்வமாக உள்ளார். ஆனால் அங்கு மோடி போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் கோபமடைந்துள்ளார்.

விளக்கம் தருக
இதையடுத்து மோடி, வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளாரா. எனக்கு சீட் கிடையாதா. இதை பாஜக தலைமை விளக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதியூரப்பா எதிர்ப்பாளர்களை இணைக்க சுஷ்மா எதிர்ப்பு
மறுபக்கம் சுஷ்மா சுவராஜ் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார். அதாவது எதியூரப்பா எதிர்ப்பாளரான பி.ஸ்ரீராமுலு தொடங்கி நடத்தி வரும் பிஎஸ் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கர்நாடகத்தில் பாஜக கூட்டணி அமைக்கவும் கூடாது, அக்கட்சியை பாஜகவுடன் இணைக்கவும் கூடாது என்று சுஷ்மா எதிர்ப்பு தெரிவித்தாராம்.

ராஜ்நாத் சிங் முகத்துக்கு நேராக
கூட்டத்தில் கலந்து கொண்ட ஜோஷி, வாரணாசி தொகுதி குறித்து கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடமே நேரடியாக விளக்கம் கோரி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டதாம்.

விளக்கம் தரவில்லை
ஆனால் ராஜ்நாத் சிங் ஜோஷியின் கேள்விக்கு நேரடியாக விளக்கம் தரவில்லையாம். அதேசமயம், ஜோஷி ஜாலியாகத்தான் இதைக் கேட்டார், பிரச்சினை செய்யவில்லை என்று பாஜக தரப்பு சமாளித்துள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications