சர்வதேச அளவில் நேற்று வெயில் வெளுத்து வாங்கிய பட்டியலில் முழுவதும் இடம் பிடித்த இந்தியா
Recommended Video
நாக்பூர்: சர்வதேச அளவில் நேற்று வெயில் வெளுத்து வாங்கிய 15 நகரங்கள் பட்டியலில், அனைத்தும் இந்திய நகரங்களே இடம் பெற்றிருந்தன. வெளிநாட்டை சேர்ந்த தனியார் வானிலை வலைத்தளம் ஒன்று வெளியிட்ட பட்டியலில் தான் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்றிரவு தகவல் ஒன்றை வெளியிட்ட தனியார் வானிலை வலைத்தளம், மத்திய இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மிக அதிபட்சமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. மத்திய இந்தியாவின் நகரங்களில் இயல்பான வெப்பநிலையை விட அதிகமாக பதிவானதாக கூறியுள்ளது

அதிக வெப்பம் பதிவான நகரங்கள் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் என்ற நகரம் 46.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் முதலிடம் பிடித்துள்ளது. விதர்பா என்ற பகுதியில் உள்ள அகோலா என்ற நகரத்தில், 46.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த 15 சூடான நகரங்களில், 9 நகரங்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவை. மத்தியப்பிரதேசத்திலிருந்து 3 நகரங்களும், உத்திரப்பிரதேசத்திலிருந்து 2 நகரங்களும், தெலுங்கானா மாநிலத்திலிருந்து 1 நகரமும் இந்த பட்டியலில் இடம்பெற்றன.
45.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, இந்த பட்டியலில் நாக்பூர் நகரம் 9-வது இடத்தில் இருந்தது. மண்டல வானிலை மையத்தின் தகவல்படி சாதாரண வெப்பநிலையை விட மூன்று டிகிரிக்கு அதிகமாக நேற்று நாக்பூரில் வெப்பநிலை பதிவானதாக கூறப்பட்டது.
இதனிடையே அடுத்து வரும் 5 நாட்களுக்கு விதர்பா, அகோலா, அமராவதி, சந்திராபூர், நாக்பூர், யவத்மல் மற்றும் வார்தா உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் கடுமையாக வாட்டி வதைக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 45 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் வெயிலில் அதிகளவு சுற்றாமலும், உடலில் நீர்சத்து வற்றாமலும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக பாதிப்புடையவர்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் கொண்டவர்கள் இந்த சூழலில் கவனமாக இருத்தல் அவசியம். தாகமே இல்லாவிட்டாலும் நாளொன்றுக்கு தேவையான குடிநீரை எடுத்து கொள்ளுங்கள் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications