Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக். 18–ல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேல்சாந்திகள் தேர்வு!

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புரம் அம்மன் கோவில்களுக்கான மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் வரும் 18-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற உள்ளது.

முன்னதாக திருவனந்தபுரம் நந்தன்கோட்டில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் வருகிற 9-ந் தேதி மற்றும் 10-ந் தேதி மேல்சாந்திக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Interview for Sabarimala Melsanthi on Oct 9, 10

இந்த நேர்காணலில் தகுதியுள்ள நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் தனித்தனி சீட்டுகளில் எழுதி போட்டு, 18-ந் தேதி நடைபெறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கமிஷனர், நிர்வாக அதிகாரி மற்றும் பக்தர்கள் முன்னிலையில் குலுக்கல் தேர்வு முறை நடைபெறும்.

இதில் தேர்வு செய்யப்படும் புதிய மேல்சாந்திகளுக்கு, அடுத்த மாதம் 16-ந் தேதி சபரிமலையில் மூலமந்திர பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து அடுத்த மண்டல- மகர விளக்கு பூஜை விழாக்காலங்களில் (ஓராண்டு) சபரிமலை அய்யப்பன் மற்றும் மாளிகைப்புரம் அம்மன் கோவில்களில் மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+