For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக். 18–ல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேல்சாந்திகள் தேர்வு!

By Mathi
Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புரம் அம்மன் கோவில்களுக்கான மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் வரும் 18-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற உள்ளது.

முன்னதாக திருவனந்தபுரம் நந்தன்கோட்டில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் வருகிற 9-ந் தேதி மற்றும் 10-ந் தேதி மேல்சாந்திக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Interview for Sabarimala Melsanthi on Oct 9, 10

இந்த நேர்காணலில் தகுதியுள்ள நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் தனித்தனி சீட்டுகளில் எழுதி போட்டு, 18-ந் தேதி நடைபெறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கமிஷனர், நிர்வாக அதிகாரி மற்றும் பக்தர்கள் முன்னிலையில் குலுக்கல் தேர்வு முறை நடைபெறும்.

இதில் தேர்வு செய்யப்படும் புதிய மேல்சாந்திகளுக்கு, அடுத்த மாதம் 16-ந் தேதி சபரிமலையில் மூலமந்திர பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து அடுத்த மண்டல- மகர விளக்கு பூஜை விழாக்காலங்களில் (ஓராண்டு) சபரிமலை அய்யப்பன் மற்றும் மாளிகைப்புரம் அம்மன் கோவில்களில் மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள்.

English summary
The interviews for the new Melsanthis of Sabarimala and Malikappuram temples will be held at the Travancore Devaswom Board headquarters in Thiruvananthapuram on October 9,10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X