ரயில்வே டிக்கெட் முன்பதிவு அப்ளிகேஷனில் திருநங்கைகளுக்கும் இடம்!
ஐஆர்சிடிசி அப்ளிகேஷனில் மூன்றாம் பாலினத்தவர் என திருநங்கைகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இந்திய ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் விண்ணப்பத்தில் மூன்றாம் பலினத்தவர் என திருங்கைகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் டிக்கெட் முன்பதிவுக்கான ஐஆர்சிடிசி அப்ளிகேஷனில் மூன்றாம் பாலினத்தவர் என திருநங்கைகளுக்கான இடம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு படிவத்தில் திருநங்கைகளுக்கு என இடம் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் டிக்கெட் முன்பதிவுக்கான மற்றும ரத்துக்கான படிவத்தில் ஆண், பெண் வரிசையில் திருநங்கையரை மூன்றாம் பாலினமா சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முன்பதிவு படிவம் மற்றும் ரத்து படிவம், ரயில்வே ஸ்டேஷனில் வாங்கப்படும் படிவங்களிலும் இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications