அன்னா ஹசாரேவுக்கு காங். போஸ்டர்களில் முக்கியத்துவம்!!
டெல்லி: காங்கிரஸ் கட்சியினரின் போஸ்டர்களில் சோனியா, ராகுலைத் தொடர்ந்து தற்போது அன்னா ஹசாரேவுக்கும் முக்கியத்தும் அளிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான யுக்திகளை காங்கிரஸ் கையாண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாகத்தான் நாடாளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு. அம் மசோதாவை நிறைவேற்றிய கையுடன், அதை வாக்கு அரசியலுக்கும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது காங்கிரஸ்.

ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் இப்போது ஒட்டும் போஸ்டர்களில் சோனியா, ராகுல் காந்தியைவிட பெரிதாக தெரிவது அன்னா ஹசாரேதான்.
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ராகுல் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி அன்னா ஹசாரே கடிதம் அனுப்பியிருந்தார் அல்லவா. அந்த கடிதத்தின் வரிகளைப் போட்டும் காங்கிரஸார் போஸ்டர் அடித்து வருகின்றனராம்.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்!!












Click it and Unblock the Notifications