இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய மசூதி அவசியமா? பரபரப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Recommended Video

டெல்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வுபெற உள்ள நிலையில் இந்த வாரம் சில முக்கிய தீர்ப்புகள் வழங்க உள்ளார். அதில் ஒன்று அயோத்தி, ராமர் கோயில் விவகாரம் தொடர்பானது.
ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ராமஜென்ம பூமி யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு தொடர்பான தீர்ப்பு இது கிடையாது. ஆனால் 1994 ஆண்டு தீர்ப்பு சுப்ரீம் கோர்ட் வழங்கிய, டாக்டர் இஸ்மாயில் பரூக்கி vs மத்திய அரசு வழக்கு தீர்ப்பு தொடர்பானது.

இஸ்லாம் மதத்திற்கு மசூதி என்பது மிகவும் அவசியமானது என்பது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோகன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நடக்கிறது.
1994ம் ஆண்டு அயோத்தி சட்டம், தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய எம்.வி.வர்மா, ஜி.ராய் மற்றும் பருச்சா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, இஸ்லாம் மத அடிப்படையில், தொழுகை நடத்துவதற்கும் இஸ்லாமிய மதக் கடமைகளை செய்வதற்கு மசூதி என்பது அவசியமானதா என்பது தொடர்பான அம்சங்களுடன் கூடிய தீர்ப்பை வழங்கின.
முஸ்லிம்களுக்கு மசூதி என்பது அவசியமான ஒன்று கிடையாது. முஸ்லிம்கள் எந்த இடத்திலும் எங்கே இருந்தும்கூட, ஏன், திறந்தவெளியில் கூட இவற்றை செய்ய முடியும். இந்த நடைமுறை இந்திய அரசியல் சாசனப்படி தடை செய்யப்படவில்லை.
நீண்டகால நன்மைக்காக எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு தலங்களையும் அரசு கையகப்படுத்த முடியும். அதே நேரம் ஒரு மதத்தினரின் வழிபாட்டு உரிமையை பாதிக்காத வகையில் அது இருக்க வேண்டும். அதாவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பிற மத வழிபாட்டு தலங்களை கையகப்படுத்த முடியும் என்பதை போலவே, மசூதி இடத்தையும் கைப்பற்ற முடியும். இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
சன்னி வக்பு வாரியம் சார்பில், மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் உச்சநீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டின்போது வாதிடும்போது, இஸ்லாமிய மதத்தில் மசூதி என்பது தொழுகை உள்ளிட்ட பிற மத நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது இஸ்லாமிய அடிப்படையேயே உலுக்கும் வகையில் உள்ளது என்று வாதிட்டார்.
இந்த வழக்கில்தான், இவ்வாரத்தில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டால் ராம ஜென்மபூமி இடம் யாருக்கு சொந்தம் என்ற முக்கியமான வழக்கில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் ராமர் கோவிலை கட்ட முடியுமா, முடியாதா என்பது தெரியவரும் என்கிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications