"ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி".. மொழிபெயர்ப்பு குளறுபடி உண்மையா?.. நடந்தது என்ன தெரியுமா?
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அருகில் எழுதி இருக்கும் தவறான தமிழ் மொழி பெயர்ப்பு உண்மையா, பொய்யா என்ற விவாதம் எழுந்துள்ளது.
Recommended Video

காந்தி நகர்: சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அருகில் எழுதி இருக்கும் தவறான தமிழ் மொழி பெயர்ப்பு உண்மையா, பொய்யா என்ற விவாதம் எழுந்துள்ளது.
குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.
இதற்கான பெயர் பலகை நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அதாவது பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சீனம், ரஷ்யா, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்த அதில், தமிழில் இடம் பெற்றிருந்த மொழிபெயர்ப்பு பெரும் சர்ச்சையானது.

சர்ச்சை
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டு என்று அதில் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வைரல் செய்து விட்டனர் மக்கள். ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்று மோசமாக மொழிபெயர்த்தது கண்டனத்தை கிளப்பியது.

பொய்யா ?
இந்த நிலையில் தற்போது, சிலைக்கு அருகே அப்படி எதுவும் போர்ட் வைக்கப்படவில்லை. அப்படி போர்ட் வைக்கப்பட்டதாக வந்த புகைப்படங்கள் அனைத்தும் பொய்யானது என்று குஜராத் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த சில உயரதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வருகிறது. தமிழகத்தை சேர்ந்த சில பாஜக நிர்வாகிகளும் அந்த மொழிபெயர்ப்பு குறித்த செய்தியை தவறு என்று மறுத்துள்ளனர்.

உண்மை என்ன
இந்த நிலையில் பிபிசி செய்தி நிறுவனம் அந்த புகைப்படம் உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தி உள்ளது. பிபிசி போட்டோகிராபர் அந்த பலகை அங்கு இருந்தது உண்மைதான் என்று கூறியுள்ளார். பிபிசி குஜராத் சேவையின் செய்தியாளர் தேஜஸ் வைத்யா, நேரில் சென்று இதை போட்டோ எடுத்தேன் என கூறியுள்ளார். அவர் எடுத்த அந்த தவறான மொழிபெயர்ப்பு பலகையின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அதுமட்டுமா
மேலும் தமிழில் எழுதப்பட்டு இருந்த அந்த வரிகள் பிரச்சனை காரணமாக வெள்ளை மை வைத்து மறைக்கப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார். சர்ச்சை காரணமாக இப்போது அந்த பெயர் பலகை நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த பெயர் பலகையில் ஹிந்தி, மராத்தி மட்டுமே சரியாக இருந்தது என்றும் அரபி உள்ளிட்ட மேலும் சில மொழிகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குட்டு உடைந்தது
இதற்கிடையே, தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தவறான மொழி பெயர்ப்பு திருத்தப்படும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் தவறு நடந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது. சிலை திறப்பு விழாவில் பாண்டியராஜனும், இன்னொரு அமைச்சர் கடம்பூர் ராஜுவும் கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications