காஷ்மீரில் முதல் தாக்குதல் நடத்திவிட்டோம்: ஐஎஸ்ஐஎஸ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் முதல் தாக்குதல் நடத்தயுள்ளதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து நாச வேலைகளில் ஈடுபடப் போவதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கலிஃபாவாக அபூபக்கர் அல் பாக்தாதி அறிவிக்கப்பட்டபோதே அவர் காஷ்மீர், குஜராத் உள்ளடங்கிய சர்வதேச இஸ்லாமிய கவுன்சில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ISIS claims its first attack in the Kashmir Valley

இந்நிலையில் ஸ்ரீநகரில் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கும், மற்றொருவரை காயப்படுத்தியதற்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தெரிவித்துள்ளது உண்மையா இல்லையா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையை செய்தது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பா அல்லது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இருந்து விலகிச் சென்று தனி அமைப்பு தொடங்கிய ஜாகிர் மூஸாவின் வேலையா என்று விசாரணை நடந்து வருகிறது.

காஷ்மீரில் அண்மை காலமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி பலமுறை ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் ஆட்கள் தால் ஏரியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+