இந்தியாவில் பசுவை வழிபடும் இந்துக்களை தாக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டம்
டெல்லி: இந்தியாவில் பசுவை வழிபடும் இந்துக்களை தாக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் பல இந்தியர்களை அணுகி அவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 16 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கை பரப்பு பத்திரிக்கையான தபிக்கில் தீவிரவாதி ஒருவரின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது,
பசுக்களை வழிபடும் இந்துக்களை குறி வைக்க கோரசான் என்ற தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நுழைய விரும்புகிறது ஐஎஸ்ஐஎஸ்.
இதற்காக இந்துக்களை மட்டும் அல்ல ஷியா முஸ்லீம்களையும் தாக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications