விண்வெளி வீரர்களுக்கான ‘குகை’ வீடுகள்... நிலவில் கட்டுகிறது இஸ்ரோ!
நிலவில் மனிதர்கள் தங்கி ஆய்வு நடத்த குகை போன்ற வீடுகளை இஸ்ரோ உருவாக்குகிறது.
டெல்லி: எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாக, குகை போன்ற அமைப்பை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
விண்வெளி ஆய்வில் உலகநாடுகளுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. விண்வெளி தொடர்பான ஹாலிவுட் படங்கள் தயாரிப்பிற்கு ஆகும் செலவைவிட குறைந்த செலவில் செயற்கைக்கோள்களைத் தயாரித்து, அவற்றை விண்ணில் ஏவி மற்ற நாடுகளைத் தொடர்ந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், நிலவிற்கு மனிதர்களை அனுப்பி எதிர்காலத்தில் தனது ஆய்வுகளை மேலும் விரிவு படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒருகட்டமாக அங்கு மனிதர்கள் தங்கி ஆய்வு மேற்கொள்வதற்கு ஏதுவாக பனிக்குகை போன்ற இருப்பிட வசதியை உருவாக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
3 டி பிரிண்டர்கள் போன்ற கருவிகளையும், ரோபோக்களையும் பயன்படுத்தி இந்த இருப்பிடங்களை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் 5 மாதிரிகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

நிலாவோட மண்ணை எடுத்து
நிலவில் உள்ள மண்ணுடன் மேலும் சில வேதியியல் பொருட்களைக் கலந்து இந்த இருப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான முதல்கட்ட ஆய்வுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

குகை ஆய்வுத்தளம்
நிலவில் அமைக்கப்படும் குகை ஆய்வுத்தளமாகப் பயன்படுத்தப்படும் எனக் கூறும் இஸ்ரோ, இனிவரும் காலங்களில் இதேபோன்ற குடியிருப்பு அமைப்புகளை உருவாக்க அமெரிக்கா போன்ற நாடுகள் விருப்பப்பட்டால், அவற்றிற்கு தங்களால் ஆன பங்களிப்பை இஸ்ரோ நிச்சயம் அளிக்கும் என்றும் உறுதியாகக் கூறுகிறது.

குகையில் தங்கலாம்
அதோடு, எதிர்காலத்தில் செயற்கைக்கோள் மூலம் நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் கூடுதல் நேரம் அங்கு தங்கி ஆய்வு மேற்கொள்ள முடியும் இந்த குகை இருப்பிடங்கள் உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இக்ளூ வீடு
இதற்காக பாதுகாப்பான பொருட்களைக் கொண்டு இந்த பனிக்குகை போன்ற வீட்டை உருவாக்க அவர்கள் பாடுபட்டு வருகின்றனர். வெற்றி பெற வாழ்த்துவோம் பாஸ்!
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா! -
Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications