வேலைவாய்ப்பு, கல்வி & ஆரோக்கிய பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன... பிரியங்கா காந்தி பேச்சு
அமேதி: வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன என்று உத்தரபிரதேசம் (கிழக்கு) காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. நாளை, 4-வது கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மத்தியப்பிரதேசம் மாநிலம் முதல்வர் கமல்நாத் மகன் நகுல் நாத் போட்டியிடும் சிந்த்வாரா தொகுதி உள்பட பீகார் (5), ஜம்மு காஷ்மீர் (1), ஜார்க்கண்ட் (3), மத்தியப்பிரதேசம் (6), மகாராஷ்டிரா (17), ஒடிசா (6), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்கம் (8) உள்ளிட்ட மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் 6 மணியுடன் நிறைவு பெற்றது.

இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பணம், புடவை மற்றும் காலணிகள் கொடுத்து போட்டியிடுவது தவறான வழி என்றார்.
அமேதி மக்கள் ஒரு போதும், யாரிடமும் கையேந்த மாட்டார்கள். நான் 12 வயதில் இருந்து இங்கே வருகிறேன் என்றும், அமேதி மற்றும் ரேபரலிக்கு பெருமைகள் அதிகம் என்றும் கூறினார். பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன; வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியம் போதிய அளவு இல்லை என்றும், தேசியவாதத்தில், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
மக்களின் பிரச்சனைகளை பாஜக அரசு கேட்கவில்லை, அவர்கள் தங்களது பிரச்சினை குறித்து குரல் கொடுத்தால், ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இது ஜனநாயகமா எனவும் கேள்வி எழுப்பினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications