அமைச்சரவை மாற்றத்தால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.. சொல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்
டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றத்தால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பது தனி நபர் ஆட்சி. எனவே மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பும், பின்பும் எந்த வித்தியாசமும் இருக்க போவதில்லை.
நிலம் கையகப்படுத்தும் நாடாளுமன்ற கூட்டு குழுவின் தலைவரான எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார்.
அதே போல் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உடையதாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி அளிக்க வேண்டும் என் உவைசியின் கோரிக்கை குறித்து கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா இல்லையா என்பதுதான் முக்கியமான பிரச்னையே ஒழிய, உவைசி என்ன சொன்னார் என்பது ஒரு பிரச்னையே கிடையாது.
முழுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் விசாரணை நடத்தி உண்மையிலேயே அவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications