Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.. ஆழ சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்.. தமிழிசை

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு குழுவினரக்கு பாராட்டு தெரிவித்ததோடு, நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.... ஆழச்சுரங்கத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்.. என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது.

 It is possible to go to the moon and set foot, It is also possible to rescue people trapped in deep tunnel, Tamilisai

இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்த உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி முதலில் அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.

மகிழ்ச்சி அடைந்தேன்: அதில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக மாற்று வழியில் மீட்பு பணிகள் நடந்தது. அடுத்ததாக பிளான் பி படி மீட்பு பணிகள் தொடர்ந்தது. இப்பாடியாக மீட்பு குழுவினர் 17- வது நாளாக போராடி தற்போது இன்று இரவு 8 .30 மணியளவில் அனைத்து அதாவது 41 தொழிலாலர்களையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு கூடியிருந்த பலரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- உத்தரகாண்ட் மாநிலம், உத்திரகாசி சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆழச்சுரங்கத்தில் சிக்கியவர்களை: நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.... ஆழச்சுரங்கத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்..... என்று நிரூபித்த இந்திய தொழில்நுட்பத்திற்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகள், மத்திய, மாநில அரசுகள், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்க உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்துள்ள மத்திய,மாநில அரசுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.... தொழிலாளர்கள் அனைவரும் முழு உடல் நல ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+