'பாகுபலி' பட தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு !
பாகுபலி திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஹைதராபாத்: பாகுபலி பட தயாரிப்பாளர்கள் பிரசாத் தேவி நேனி, ஷோபு யார்ல கட்டா ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக முக்கிய நகரங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். டெல்லி, மும்பை, சண்டீகர் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவு சோதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பாரிமுனையில் உள்ள நகைக்கடைகள், ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யும் நபர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

அதேநேரம் ஹைதராபாத்தில் உள்ள பாகுபலி பட தயாரிப்பாளர்கள் பிரசாத் தேவி நேனி, ஷோபு யார்ல கட்டா ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. சோதனையைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் மற்ற தயாரிப்பாளர்களும் பீதியில் உள்ளனர்.
பாகுபலி முதல் பாகம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications