முதல்வரின் பிரச்சாரத்தில் ‘நீதி வேண்டி’ கோஷம்... இளைஞருக்கு ‘பளார்’ விட்ட அமைச்சரால் பரபரப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வரின் பிரசார கூட்டத்தில் கோஷம் எழுப்பிய வாலிபரை, அம்மாநில அமைச்சர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலையோட்டி, ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பாராமுல்லா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றினார்.
உமர் அப்துல்லா பேசத் தொடங்கியதும், திடீரென கூட்டத்தில் அமர்ந்திருந்த அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஹில்லா அகமத் என்ற இளைஞர், ‘எங்களுக்கு நீதி வேண்டும்' எனக் கோஷம் எழுப்பத் தொடங்கினார்.
பிரச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்த அக்கோஷத்தால் ஆத்திரமடைந்த அம்மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் முகமது அக்பர், மேடையில் இருந்து கீழே இறங்கி கோஷம் எழுப்பிய இளைஞரின் கன்னத்தில் அறைந்து விட்டார்.
உடனடியாக அந்த இளைஞரையும், அவரது சகோதரரையும் போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டம் நடந்தது. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தில் இளைஞர் ஒருவரை அமைச்சர் அறைந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் முகமது அக்பர், நடந்த சம்பவத்திற்கு தனது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் அறை வாங்கிய இளைஞரை அழைத்து தனது செயலுக்காக அவர் மன்னிப்பு கோரினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications