காஷ்மீரில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை-தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: ராஜ்நாத் சிங்
ஜம்மு காஷ்மீரில் போர்நிறுத்தம் நீட்டிப்பு இல்லை, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போர்நிறுத்தம் நீட்டிப்பு இல்லை என்றும் முன்பு போலவே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ரம்ஜான் மாத நோன்பை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த முடிவு ஜம்மு காஷ்மீர் மீதான அன்பிலும் அமைதியிலும் அக்கறைகொண்டு எடுக்கப்பட்டது.

ரம்ஜான் நோன்பை மக்கள் அமைதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அமைதியான சூழல் உருவாக்கப்பட்டது." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், "தீவிரவாதிகளின் தாக்குதல் மற்றும் அவர்கள் மக்களை கொல்வதைத் தடுக்க தொடக்கத்திலிருந்தே பாதுகாப்பு படையினர் அத்தியாவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் வன்முறையும் தீவிரவாதமும் இல்லாத அமைதியான சூழலை உருவாக்க பாடுபட்டு வருகிறது." என்று கூறியுள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் வன்முறை தாக்குதல்களை தடுக்கும் வகையிலும் காஷ்மீரில் அமைதியான சூழல் உருவாவதை உறுதிசெய்யும் விதத்திலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்று முதல் தொடரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் தற்காலிக போர்நிறுத்தத்தை கடந்த மே 17 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த போர் நிறுத்தம் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் வேண்டுகோளை ஏற்று அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் 17 ஆண்டுகளுக்குப் பின் நடந்த முதல் போர் நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications