காஷ்மீரில் திடீர் திருப்பம்: முப்தி முகமது சயீத்துக்கு எதிரான தேசியவாத காங். வேட்பாளர் விலகல்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வரும் ஜனநாயக மக்கள் கட்சியின் மூத்த தலைவருமான முப்தி முகமது சயீத்தை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மெக்பூப் பெக் திடீரென தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மெக்பூப் கடந்த லோக்சபா தேர்தலில் அனந்தநாக் தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெக்பூபா முப்தியை எதிர்த்துப் போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அவரை தெற்கு காஷ்மீர் சட்டசபை தொகுதியின் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் திடீரென தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மெக்பூப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் ஆர்.எஸ்.எஸ்., பாஜக முன்னேறுவதைத் தடுக்க மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சயீத்தின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். அவரது இந்த அறிவிப்பு தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் ஜம்மு காஷ்மீர் அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications