காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்- 2 ராணுவ வீரர்கள் பலி; 4 பேர் படுகாயம்!!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். புல்வாமா மாவட்டத்தில் விமானப்படை தளம் அருகே இன்று தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் பலியாகி உள்ளனர். மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரத்தில் கடந்த 5 நாட்களில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள 3வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications