பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை நேரில் அழைத்தார் ஜெகன்மோகன் ரெட்டி!
டெல்லி: வரும் 30-ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆந்திரத்துக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மண்ணை கவ்வியது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. 140 தொகுதிகளுக்கு மேல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார்.
இந்த நிலையில் நேற்று ஜெகன்மோகன் ரெட்டி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதா இல்லை பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு கொடுப்பதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Delhi: YSRCP chief Jaganmohan Reddy met Prime Minister Narendra Modi today. V Vijaya Sai Reddy and other leaders of YSRCP were also present. pic.twitter.com/227596XZEx
— ANI (@ANI) May 26, 2019
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதற்கு வாழ்த்துகளையும் ஜெகன் தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications