Swarn Prasadam: ஆத்தீ! தங்கம் விக்குற விலைக்கு ஸ்வீட்டா? ஜெய்ப்பூர் இனிப்பு கடையில் சுவர்ண பிரசாதம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெயப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் 24 காரட் உண்ணக் கூடிய தங்கத்தால் செய்யப்பட்ட இனிப்பு அறிமுகமாகியுள்ளது. இது ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
'ஸ்வர்ண பிரசாதம்' (Swarn Prasadam) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விசேஷ இனிப்பு, முழுக்க முழுக்க 24 காரட் உண்ணக்கூடிய தங்கத்தால் நிரப்பப்பட்டுள்ளது. இதன் விலை, ஒரு கிலோவுக்கு ரூ.1,11,000 ஆகும்.

இந்த இனிப்புத் தயாரிப்பில், உட்புறம் முழுவதும் 24 காரட் சுத்தமான, உண்ணக் கூடிய தங்கப் படலத்தால் (Gold Flakes/Leaf) மூடப்பட்டுள்ளது.
தங்கம் மட்டுமின்றி, உலகெங்கிலும் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குங்குமப்பூ, பாதாம் பருப்பு, பிஸ்தா மற்றும் பல விலை உயர்ந்த உயர் தரமான பொருட்கள் இந்த இனிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வளவு விலை உயர்ந்த இனிப்பை வாங்குபவர்களுக்கு, ஒரு மரத்தாலான பெட்டியில் (Wooden Box) அதை அழகாகப் பொதிந்து வழங்குவதாகவும் கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த 'ஸ்வர்ண பிரசாதம்' இனிப்பு, பண்டிகைக் காலத்தில் அன்பளிப்பாக வழங்குவதற்கும், விருந்தினர்களை உபசரிப்பதற்கும் ஒரு தனித்துவமான ஆடம்பரத் தேர்வாக இருக்கும் என்று கடை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். இது நாட்டின் மிக விலை உயர்ந்த இனிப்பு என்ற பெருமையைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரின் இந்த இனிப்புக் கடை, ஸ்வர்ண பிரசாதம் மட்டுமின்றி, 24 காரட் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட பிஸ்தா லோஞ்ச் (கிலோ ரூ.7,000), காஜு கட்லி (கிலோ ரூ.3,500) மற்றும் லட்டு (கிலோ ரூ.2,500) போன்ற பிற ஆடம்பர இனிப்புகளையும் விற்பனைக்கு வைத்துள்ளது.
ஸ்வர்ண பிரசாத இனிப்புகள், சிறிய நகைப் பெட்டிகளைப் போல வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகளில் (1, 4 மற்றும் 6 துண்டுகள் கொண்ட பெட்டிகள்) மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பிரீமியம் பேக்கேஜிங், வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு இனிப்பு என்பதைத் தாண்டி, விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைப் பரிசளிக்கும் உணர்வை அளிக்கிறது.
ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடை, 24 காரட் உண்ணக்கூடிய தங்கத்தால் நிரப்பப்பட்ட ‘ஸ்வர்ண பிரசாதம்’ எனும் இனிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது! 1 கிலோ ‘ஸ்வர்ண பிரசாதம்’ ரூ.1,11,000!#Sweet #ViralWatch #Jaipur #SwarnPrasadam #OneIndia #TamilOneindia pic.twitter.com/NEEGDienQ3
— Oneindia Tamil (@thatsTamil) October 18, 2025
இந்த ஆடம்பரப் படைப்பு, தீபாவளியை முன்னிட்டு செல்வந்தர்கள் மற்றும் உயர் பெருநிறுவனங்களின் பரிசளிக்கும் கலாச்சாரத்தில் ஒரு புதிய வரையறையை உருவாக்கியுள்ளது. பாரம்பரிய இந்திய இனிப்புகளை, ஆரோக்கியம் மற்றும் ஆடம்பரத்துடன் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சியாக 'ஸ்வர்ண பிரசாதம்' பார்க்கப்படுகிறது.
இந்த இனிப்புக் கடையில், ஸ்வர்ண பிரசாதத்தைத் தவிர, ஸ்வர்ண பாஸ்மா பாரத் (கிலோ ரூ.85,000), சண்டி பாஸ்மா பாரத் (கிலோ ரூ.58,000) போன்ற தங்க மற்றும் வெள்ளி பாஸ்மா கலந்த பிற விலையுயர்ந்த இனிப்புகளும் விற்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications