என் கண்களைத் தானம் செய்கிறேன்.. ஜெயராம் ரமேஷ் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தோடு, ராஞ்சியில் உள்ள காஷ்யப் நினைவு கண் வங்கிக்கும் தனது கண்களைத் தானம் செய்வதாக அவர் உறுதியளித்து கையெழுத்தும் போட்டுக் கொடு்ததார்.
பின்னர் அவர் பேசுகையில்,எனது கண்களைத் தானம் செய்ய வேண்டும் என்ற எனது விருப்பம் இப்போது நிறைவேறியுள்ளது. எனது கண்களை காஷ்யப் நினைவு கண் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். எனது இறுதிச் சடங்குள் சரண்டாவில் நடக்க வேண்டும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
காஷ்யப் நினைவு கண் வங்கியின் நிறுவனர்களான டாக்டர் பாரதி காஷ்யப், டாக்டர் பி.பி. காஷ்யப், அமைச்சர் ஜெயராம் ரமேஷின் அறிவிப்பையும், உறுதிமொவியையும் வரவேற்றுப் பாராட்டிப் பேசினர்.












Click it and Unblock the Notifications