For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தற்கொலை படை தீவிரவாதி கைது

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சியால்கோட் நகரைச் சேர்ந்த முகம்மது சாதிக் குஜ்ஜார் என்ற 17 வயதான அந்த தீவிரவாதி, காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். ராணுவமும், பாரமுல்லா மாவட்ட காவல்துறையும் இணைந்து குஜ்ஜாரை கைது செய்துள்ளனர்.

Jaish-e-Mohammad terrorist arrested from Baramulla

முகம்மது சாதிக் குஜ்ஜாரை, இந்திய ராணுவமும், பாரமுல்லா மாவட்ட காவல்துறையும் இணைந்து கைது செய்துள்ளன. இந்த கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு காஷ்மீரின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கரிப் தாஸ், இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நடந்த தாக்குதலில் இவருக்கு தொடர்பு உள்ளது.

மேலும் எல்லையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழக்கக் காரணமான முந்தைய தாக்குதல் ஒன்றில், முகம்மது சாதிக் குஜ்ஜாருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
jammu and Kashmir: Jaish-e-Mohammad terrorist Sadiq Gujjar arrested from Baramulla
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X