ஜல்லிக்கட்டு புரட்சி "மோடி"யின் குஜராத், மும்பைக்கும் பரவியது.. !
குஜராத் மாநிலம் வதோதரா காந்தி சிலை முன்பு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
காந்திநகர்: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குஜராத் மற்றும் மும்பையிலும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை, மதுரை, தேனி, சேலம் உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் கூட்டம் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து குஜராத்தில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வதோதராவில் காந்தி சிலையின் முன்பு ஏராளமான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் கோரி முழக்கமிட்டனர்.
இதேபோல் மும்பையில் மனித சங்கிலி போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
Gujarat: People protest in support of #Jallikattu in Vadodara pic.twitter.com/VjxPPA0DJb
— ANI (@ANI_news) January 20, 2017