மேற்கு வங்கத்தில் "செட்டிலாகி" இந்தியாவில் தாக்குதல் நடத்த வங்கதேச தீவிரவாதிகள் சதி!
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: ஹைதராபாத்தை தலைமையிடமாக அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி வரும் நிலையில் இந்தியர்களை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி தாக்குதல் நடத்த வங்கதேச தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹைதராபாத்தை தலைமையகமாக்க உள்ளூர் தீவிரவாத இயக்கங்கள் உதவியுடன் அல்கொய்தா இயக்கம் முயற்சித்து வருகிறது. ஹைதராபாத்தை இந்தியாவிடம் இருந்து விடுவித்து மீண்டும் நிஜாம்கள் ஆட்சியை கொண்டுவருவோம் என்ற பிரசாரத்தின் மூலமாக ஆட்சேர்ப்பு பணியில் அல்கொய்தா ஈடுபடுவதாக புலனாய்வுத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் வங்கதேச தீவிரவாதிகளின் புதிய வியூகம் குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

- வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பினர் மேற்கு வங்கத்தை நிரந்தர தலைமையகமாக்க திட்டமிட்டுள்ளனர்.
- தீவிரவாதி முப்சாலின் தொலைபேசி பேச்சுகளின் அடிப்படையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- அதாவது மேற்கு வங்கத்துக்குள் ஊடுருவி இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இந்தியர் என்ற அடையாளத்துடனேயே இந்தியாவில் தாக்குதல் நடத்துவது என்பதுதான் ஜமாத் உல் முஜாஹிதீனின் யுக்தி.
- இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்தையும் இந்த அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகிய இடங்களில்தான் முகாம்களை அமைக்க திட்டமிட்டு வருகின்றனர்.
- மேற்கு வங்கத்தின் பல இடங்களிலும் தங்களது தீவிரவாத முகாம்களை விரிவுபடுத்தியும் இருக்கின்றனர்.
- மேற்கு வங்கத்தில் செட்டிலாகி குடும்ப உறவுகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் தங்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு கிடைக்கும் என்பது ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பின் வியூகம்.












Click it and Unblock the Notifications